Thursday, 19 June 2014

சுந்தரி கண்ணால் ஒரு சேதி, Sundari kannal oru sedhi


--------------------------------------------------------------------------
படம் : தளபதி
பாடியவர்கள் : S.P.பாலசுப்பிரமணியம்,S.ஜானகி
இசை : இசைஞானி இளையராஜா
பாடல் வரிகள் :
கவிஞர் வாலி
--------------------------------------------------------------------------
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே


சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி

என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
 



வாய்மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய்விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா
வாள்பிடித்து நின்றால்கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால்கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
தேனிலவு நான் வாட ஏன் இந்த சோதனை
வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை
எனைத்தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ



என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
 

நான் உனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே


சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி

என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
 


சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கீனால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நானுன் மார்பில் தூங்கினால்

மாதங்களும் வாரம்  ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ நீ எனைத்தீண்டினால்
காயங்களும் ஆறாதோ நீ எதிர்தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக்கூடும்


சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே


சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
 

No comments:

Post a Comment